0
0
Read Time:49 Second
01.08.2007அன்று யாழில் வைத்து சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், யாழ் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.